மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

திருகோணமலை அருள்மிகு பத்ரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஸவம்.
திருகோணமலையில் கம்பீரமும், அழகு நிறைந்தவளாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வழங்கும் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஏப்ரல் 1ம் திகதி கொடியேற்றம் நிகழ்ந்து இன்று 10ம் திருவிழாவான இரதோற்ஸவம் இடம்பெறுகின்றது..அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தான பூஜை தம்பபூஜை இடம்பெற்று 6.15 மணிக்கு விசேட அலங்காரங்களுடன் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. காலை 8 மணிக்கு அடியார்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் மேள, தாள மங்கள இசையுடன் சிற்ப சாஸ்திர விதிகளுக்கு அமையப் பெற்ற அழகிய சித்திர தேரில் விநாயகரும் முருகனும்…