அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

டிரம்பின் வரி விதிப்பால் கார் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம்.
டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, கார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தென் கொரிய அரசு வழங்கியுள்ளது. கார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவியை 9 பில்லியன் டாலரிலிருந்து பத்தேகால் பில்லியன் டாலராக அதிகரித்ததுடன், உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்க, விற்பனை வரியை 5 சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக குறைத்துள்ளது. மின்சாரக கார்களுக்கு வழங்கப்படும் மானியமும் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.