நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

200 வருட வரலாற்றைக்கொண்ட மாத்தளை முத்துமாரி அம்மனுக்கு மாசி மக மஹோற்சவம் ஆரம்பம்.
கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே மிடுக்காய் 108 அடி உயரமான இராஜகோபுரத்தோடு அமைந்துள்ளது மாத்தளை முத்துமாரி அம்மா. 200 வருட வரலாறு காணப்படும் முத்துமாரி அம்மனுக்கு மாசி மத மஹோற்சவம் இன்று (வெப்ரவரி 18) கொடியேற்றதோடு ஆரம்பமானது. அடுத்து 21நாட்கள் மஹோற்சவ காலை மாலை பூஜைகளோடு இனிதே நடைபெற திருவுளம் கொண்டுள்ளது. இவ்வாலயத்துக்கான பஞ்சரத பவனி மார்ச்மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது.இதன்போது முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர்…