65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லங்கா ரைட் 2025
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் ‘லங்கா ரைட் 2025’ சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 18ஆம் திகதி லேக் ஹவுஸ் வளாகத்தில் தொடங்கி, பேலியகொடை பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் இப்போட்டியின் முதல் நாளில் 106 கி.மீ. பயணித்து கன்னொருவயை அடைந்து இரண்டாம் நாள் கண்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலும், மூன்றாம் நாள்…

