பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 தானசாலைகள்

2025 பொசோன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) விசேட வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்துள்ளார். பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின்படி, கொழும்பில் 944, கம்பஹாவில் 1,792, களுத்துறையில் 977, கண்டியில் 1,264, மாத்தளையில் 812, நுவரெலியாவில் 352, காலியில் 1,186, மாத்தறையில் 1,021, அம்பாந்தோட்டையில் 533, யாழ்ப்பாணத்தில் 03, கிளிநொச்சியில் 03, முல்லைத்தீவில் 17, வவுனியாவில் 21, மன்னாரில் 02, மட்டக்களப்பில்…

Read More

இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார். மூலப்பொருட்களின் விலை…

Read More

திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தையிட்டி விகாரைக்கு அருகிலோ, அதன் நுழைவாயில், வீதியிலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு…

Read More

பொலிஸார் மீது தாக்குதல்: ஐந்து சந்தேகநபர்கள் கைது

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பொசொன் தினத்தில் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும்…

Read More

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

காத்தான்குடி நகர வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பாரிய தீயினை தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த வியாபார நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன..

Read More

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்க இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது கழுத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த தாயின் மருமகன் (மகளை மணந்தவர்) தடியொன்றை எடுத்து அவரைத் தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலில் அந்த நபர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்த நபர் வீட்டில் வசிப்பவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு…

Read More

லொறி விபத்தில் சாரதி படுகாயம்

பாதெனிய – அநுராதபுரம் பிரதான வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் லொறி ஒன்று(30) விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி சாரதியின் நித்திரை காரணமாக அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் லொறியின் சாரதி படுகாயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.  இருப்பினும் ஏனைய வகுப்பு சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More