இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(வெப்ரவரி 16) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நீண்டகாலமாக கட்சியின் பொதுச்செயலாளரக கடமையாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து கட்சியின் துணைச்செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இத்தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்படவில்லை என்பதனையும் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கட்சியின்…

Read More

“பிடியளவு கமநிலத்துக்கு” திட்டம் தற்போது உப்புவேலி முத்துநகரில் ஆரம்பம்.

இலங்கை முழுவதுமாக வினைத்திறன் மிக்க விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான “பிடியளவு கமநிலத்துக்கு”எனும் திட்டம் நேற்று (வெப்ரவரி 15) திருகோணமலை மாவட்ட உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு உற்பட்ட முத்துநகர் பகுதியில் ஆரம்பமானது. உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முத்துநகர், தகரவெட்டுவான், மத்தியவேலி, அம்மன்குலம் ஆகிய விவசாய சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது உப்புவேலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.தர்ஷானந்தன் தலைமையில் இடம்பெற்றது. விவசாயத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின்…

Read More

புதிதாக உதயமான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான…

Read More

இலங்கையில் சாபக்கேடாக மாறும் சிறுநீரக நோய்!

இலங்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோயினால்ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். கடந்த 10வருடங்களில் இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதோடு, சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் நாட்டில் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் வெளியிட்ட தகவலில் வெளியிடப்பட்டுள்ளது. உடனடி சிகிச்சை பெறமுடியாத நாள்ப்பட்ட சிறுநீரக நோயாளர்களே இவ்வாறு மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற…

Read More

அரச ஊழியர்களின் சம்பளம் வாய்ப்புள்ளது…!

நாளை(வெப்ரவரி 17) புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சர்க்கப்படவுள்ளநிலையில் அரச ஊழியர்களின் ஊதிய உயர்வுகளையும் , புதிய நியமங்களையும் எதிர்பார்த்துள்ளதாக அரசஊழியர்களும், வேலையில்லா பட்டதாரிகளும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இன்றைய இலங்கையில் பொருளாதாரத்தலம்பலின் மத்தியில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைக்கு அமைவாக அமையும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பற்றவையிடச்சென்ற பிரதமர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை இன்று (வெப்ரவரி 15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து பல்வேறு முக்கிய…

Read More

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த 13 நாட்களில் மட்டும் இலங்கைக்கு 115,043 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஜனவரி 1 ஆம் திகதி முதல் 367,804 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், உணவாக பணியாளர்கள், வாகன சாரதிகள்,…

Read More

இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுகாதாரப்பரிசோதகருக்கு சிறை.

ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க இலஞ்சம் பெற்றபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொது சுகாதார ஆய்வாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கலேவெல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளர், நேற்று (வெப்ரவரி 14) ரூ. 200,000 இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

கிரிபாவ பொலிஸ் பிரிவின் தம்சோபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவா பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்சோபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அத்தோடு காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி…

Read More