யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

மண்மேட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி
பெல்மடுல்ல, புலத்வெல்கொட பகுதியில் நேற்று (08) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புட்டுஹபுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் சுவர் ஒன்றை அமைப்பதற்காக வந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில்…