அமெரிக்காவுக்கான அஞ்சல் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கான வழிகாட்டல்களை பின்பற்ற அமைச்சரவை அனுமதி

அமெரிக்காவுக்கான அஞ்சல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2025.08.29 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இதுவரை நிலவிய 800 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு அதிகமான பெறுமதி கொண்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி இல்லாமல் குறைந்தபட்ச வரிவிலக்கை நீக்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதனால், 100 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்குக் குறைவான பெறுமதி கொண்ட வணிக ரீதியற்ற பரிசுப் பொருட்கள், ஆவணங்கள் மற்றும் விசேட விதிவிலக்குகளுக்குரிய…

Read More

மண்முனைப்பற்று காணி விவகாரம் : இன அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை – பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்

மண்முனைப்பற்று காணி விவகாரம் தொடர்பில் நீதி மன்ற நடவடிக்கை எடுக்கும்போது இன அடிப்படையை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஹிஸ்புல்லாஹ் எம்.பி தனது கேள்வியின்போது, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினையில், அந்த பிரதேச செயலகத்தினர்  தொடர்ச்சியாக…

Read More

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 816 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…

Read More

நஞ்சுகள், அபின், அபாயகரமான ஔடதங்கள் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பேச்சு

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது. நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும்…

Read More

கொட்டகலையில் ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு  அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை  இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  லோகில் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்  கொட்டகலையில் உள்ள லோகில் தோட்ட நுழைவாயிலுக்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

Read More

மட்டக்களப்பில் அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம் – வைத்திய சேவைகள் பாதிப்பு

அரச வைத்திய  அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.  கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனை வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்  தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.  குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  கலாரஞ்சனி தெரிவித்தார். அக்கரைப்பற்றி ஆதார்…

Read More

மின்னஞ்சல் ஊடாக வந்த அச்சுறுத்தல் ; பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தில் பதற்றம்!

பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மின்னஞ்சல் இன்று புதன்கிழமை (14) காலை 09.24 மணியளவில் பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மின்னஞ்சலில் பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனையடுத்து இது தொடர்பில் பதுளை பொலிஸ் தலைமையகம் மற்றும் கொழும்பு தொழில் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: 03 சந்தேக நபர்கள் கைது

லுணுகம்வெஹெர மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லுணுகம்வெஹெர – உனத்துவேவ பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3,983 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் தனமல்வில, தேவ்ரம்வெஹெர பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர…

Read More

இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக…

Read More

பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் விசேட நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் சோதனை

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,995 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 659 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 279 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 171 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 539…

Read More