2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு சினமன் லைஃப்பில் ஜூன் 11-ம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, நிதி முகாமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திறன் ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தலைமைச் சிறப்புக்களைப் பாராட்டியது. இந்த நிகழ்வு, இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எழுச்சிமிக்க தொழில்துறை தலைவர்கள் மற்றும் புத்தாக்கமான நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியது. MAS…

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் கடிதம் ஊடாக எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ள திலக் சியம்பலாப்பிட்டிய, தான் குறுகிய காலத்திற்கு இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் சமர்ப்பித்ததாகவும், அவரது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.