கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் தம்புத்தேகம மற்றும் செனரத்க்காம ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(வெப்ரவரி 19) காலை இந்த இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்துள்ளனர். 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இன்றைய தங்கவிலை நிலவரம் – சற்றே உயர்வு.

24கரட் தங்கம் – 233,000 ரூபா 22கரட் தங்கம் – 214,000ரூபா 18கரட் தங்கம் – 175,000 ரூபாவாக காணப்படுகின்றது. இதன்படி, 24கரட் தங்கம் – 29,125 ரூபா 22கரட் தங்கம் – 26,750 ரூபா 18கரட் தங்கம் – 21,875 ரூபாவாக விற்பனையாகின்றது.

Read More

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம்.

புத்துக்கடையில் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் உடையில் மாறுவேடமிட்ட வந்த துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிதாரி சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்றத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்குப் பின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச்சென்றுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குவிசாரணைக்காக சஞ்சீவ…

Read More

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரம் ஏழு நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததோடு இதற்குதேவையான பணியாளர்கள் சுழற்ச்சி முறையில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். மேலதிக சேவை பணியாளர்களுக்காக பயிற்றப்பட்ட…

Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்…!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது. செவ்வாய்க்கிழமையை தவிர ஏனைய 6 நாட்களும் கப்பல் பயணப்படும். குறித்த இணையத்தினூடாக பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Read More

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையும் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெப்ரவரி 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 494,000 ரூபாவை சிலாபத்திலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளை கோரியதன் ஊடாக இலஞ்ச ஊழல் தடைச்சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பியங்கர ஜயரத்னவை தலா 5 இலட்சம் ரூபா…

Read More

200 வருட வரலாற்றைக்கொண்ட மாத்தளை முத்துமாரி அம்மனுக்கு மாசி மக மஹோற்சவம் ஆரம்பம்.

கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே மிடுக்காய் 108 அடி உயரமான இராஜகோபுரத்தோடு அமைந்துள்ளது மாத்தளை முத்துமாரி அம்மா. 200 வருட வரலாறு காணப்படும் முத்துமாரி அம்மனுக்கு மாசி மத மஹோற்சவம் இன்று (வெப்ரவரி 18) கொடியேற்றதோடு ஆரம்பமானது. அடுத்து 21நாட்கள் மஹோற்சவ காலை மாலை பூஜைகளோடு இனிதே நடைபெற திருவுளம் கொண்டுள்ளது. இவ்வாலயத்துக்கான பஞ்சரத பவனி மார்ச்மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது.இதன்போது முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர்…

Read More

2024 ஸ்கேன் ஜம்போ போனான்ஸா 55 விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் மற்றும் டெப் கணனிகளை பரிசளித்தது.

C.W. Mackie PLC நிறுவனத்தின் மிக விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் கீழ் உள்ள ஒரு முதன்மையான வர்த்தகநாமமான ஸ்கேன் ஜம்போ பீனட், “ஸ்கேன் ஜம்போ போனான்ஸா” மற்றும் “ஸ்கேன் டெப் ஜம்போ போனான்ஸா” ஆகிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தின் 8ஆவது பதிப்பை நிறைவு செய்தது. இந்த நிகழ்வின் போது, ​​50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, 5 வெற்றியாளர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நிகழ்வு…

Read More

புத்தளம் பகுதியில் இசைக்கலைஞர் சடலம் மீட்பு.

புத்தளம், ஆராச்சிகட்டுவ பகுதியில் சிலாபம், மணக்குளம் பகுதியை சேர்ந்த பாடகரும் இசைக்கலைஞருமான 42 வயதான இந்திக ரொஷான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஜயகுபாத பகுதியில் உள்ள ஒரு வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று(வெப்ரவரி 17) இரவு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன் , மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார்…

Read More