65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய உள்நாட்டுத் தேனீ கண்டுபிடிப்பு!
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று சிறிய கொம்புகளைக் கொண்ட புதிய உள்நாட்டுத் தேனீ இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதிய தேனீ இனமானது ஒரு பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்டிருப்பதால், இதற்கு ‘லூசிஃபர்’ (Lucifer) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான ‘கொம்புகள்’ பெண் தேனீக்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன. அதேபோல், இந்த தேனீக்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘லூசிஃபர்’ என்ற பெயர், லத்தீன் மொழியில் “ஒளியைத் தாங்கி வருபவர்” என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய தேனீ…

