இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. Home Lands Group நிறுவனத்தின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமான Pentara Residencies, இதன்போது கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது, இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான தனி முதலீட்டு திட்டம் எனும் பெருமையை பெற்றுள்ளது. “Signature Night: Beyond the Skyline” எனப் பெயரிடப்பட்ட…

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸார் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது….