அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.