பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Author Info
Find Me Here
Trending News
ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த போரை முடிக்க முடியும் என நினைத்தால் அது பிழையான நம்பிக்கை என யேமனின் ஹௌதி இயக்கத்தின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமட் அல்-ஃபராஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். டிரம்ப் விரைவில் தாக்குதல்களை முடித்து போரை முடிக்க விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளது. ஆனால் ஒரு அணு தளத்தை அழிப்பது போரின் முடிவு இல்லை, அது ஒரு தொடக்கமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாக்கு-ஓடு” எனப்படும் பழைய போர்…
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் விஜய், 1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பூவே உனக்காக இவருடைய முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, Friends என பல வெற்றிப்படங்களை தந்தார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய்,…
ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.