65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Author Info
Find Me Here
Trending News
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2,84,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (19) முதல் சனிக்கிழமைக்குள் மேலும் 3,51,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் யாரையும் கைவிடாத, அறநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் வலியுறுத்தினார்.

