உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

வாய்வழி புற்றுநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
நாட்டில் வாய்வழிப் புற்றுநோயால் தினமும் மூன்று அல்லது நான்கு பேர் உயிரிழக்கின்றனர் என வாய்வழி மற்றும் முகவாய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார். நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய்வழி புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளார் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.