நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தெற்கு ஆசியாவில் முதல் AI இயக்க MRI ஸ்கேனரை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நவலோக்க
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனை, தெற்கு ஆசிய சுகாதாரத் துறையில் AIஆல் இயக்கப்படும் முதல் MRI ஸ்கேனர் இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது, இது நாட்டின் சுகாதாரத் துறையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். கடந்த மார்ச் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, சுகாதார கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட நோயாளர் பராமரிப்பில் ஒரு முன்னோடியாக தனது சிறப்பினை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த நவலோக்க மருத்துவமனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. 4.5 மில்லியன்…

