ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

தனது முல்லைத்தீவு கிளையைபுதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE.
இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தனது முல்லைத்தீவில் உள்ள தனது கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிதி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது. இந்த புதிய HNB FINANCE முல்லைத்தீவு கிளை முல்லைத்தீவு பிரதான வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கிளை திறப்பு நிகழ்வு HNB…