பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26.02.2025) ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.