65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ‘நெஸ் ரூஜ்’ சேவை: 9,100 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பினர்
சுவிட்சர்லாந்தில் ‘நெஸ் ரூஜ்’ (Nez Rouge) என்ற தன்னார்வ போக்குவரத்து சேவை மூலம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 9,134 பேர் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 766 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 5,000-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இலவசமாக வழங்கப்படும் இச்சேவை வரும் புத்தாண்டு இரவு வரையிலும் தொடரும். எனினும், அன்றைய தினம் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அதன்…

