தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் எம்பிலிப்பிட்டிய பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ள பொலிஸ்…

Read More

NPPயின் பதியதலாவ பிரதேச சபை வரவு செலவுத் திட்டமும் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் பதியதலாவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.  பிரதேச சபையின் தவிசாளர் அனுர ராஜபக்ஷவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதில் வரவு செலவுத் திட்டத்திற்குச் ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.  பதியதலாவ பிரதேச சபையின் மொத்த சபை அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆகும்.  இதேவேளை, தனமல்வில பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.  வாக்குகள் சமனானதன்…

Read More

வடக்கு கிழக்கில் தேசிய அரசியலிலும், பிரதேச அரசியலிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. – பிமல் ரத்நாயக்க

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று (மே 7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை…

Read More

தேசிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர 38 வயதில் திடீரென உயிரிழந்துள்ளார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஆளும் கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான ப்ராடோ ரக சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த வாகனம் இன்று (மார்ச் 25) பிலியந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுசந்த தொடாவத்தை வேறு பெண்களுடன் முறைகேடான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது…

Read More

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்.

யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று (மார்ச் 20) மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தேசிய மக்கள் சக்தி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன் உள்ளிட்ட 17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் வருகைதந்தனர். அத்தோடு,உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும்…

Read More

மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி

மகா சிவராத்திரி விரதம் உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானைப் பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. எனவே, மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்….

Read More

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.  சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read More