2026 க்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி ஆரம்பமாகும் ; பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய ‘ A ‘ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் விஜயம் செய்வார்கள். வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே அதிகாரிகள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Read More