வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…

தென்கொரிய முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் மூன் ஜே இன். கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த அவர் சட்ட விரோதமாக தனது முன்னாள் மருமகனை விமான போக்குவரத்து துறை இயக்குனராக பதவியமர்த்தி உள்ளார். எனவே அவர் பெற்ற ஊதியம், சலுகைகள் மூலம் தாய்லாந்தின் தாய் ஈஸ்டர் ஜெட் விமான நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபரின் பட்டியலில் மூன் ஜே இன்னும்…