அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

காலமானார் போப் பிரான்சிஸ்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், இன்று காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகனுக்குத் திரும்பினார். ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, “காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதாக வாடிகன் அறிக்கை…