‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். செலான் வங்கியின் பிரதான செயல்பாட்டு அதிகாரி ரணில் திசாநாயக்க மற்றும் பிரதான நிதி அதிகாரி ஷானுக ஜயரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

பெருந்தோட்டத் துறையில் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் குறித்த இலங்கைபெருந்தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின்அறிக்கை

தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை…

Read More

நாவலப்பிட்டி – கண்டி வீதி திறப்பு

திவ்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்’ ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களின் பின்னர் மீள மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. எனினும் வீதிக்கு மேல் பல்வேறு இடங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அதற்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் வரை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக வீதி அமைக்கப்பட்டு பல நிபந்தனைகளுடன் முற்றாக பொதுமக்களின் பாவனைக்காக இன்று (15) திறந்து விடப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு…

Read More

ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி வெள்ள நிவாரணப்பணிகளுக்காக பாதுகாப்பு அமைச்சிடம் 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது

இலங்கையின் முன்னணி கையுறை பாதுகாப்பு தீர்வுகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (DPL), அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50,000 பாதுகாப்பு கையுறைகளை பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை , தேசிய அனர்த்த முயற்சிகளுக்கு தனியார் துறையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் விதமாக, ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிகா ஜனதீர ஆகியோர் இணைந்து,…

Read More

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

ஜனாதிபதி தலைமையில் இன்று (15) முற்பகல் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடியிருந்தது டித்வா சூறாவளிக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்வை மீட்டெடுக்கத் தேவையான கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டன. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சபை அறிக்கைக்கு இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத்…

Read More

அரச, அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!

தித்வா புயலால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களையடுத்து நாளை(16) செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பமாகவுள்ளன. எனினும் இடர்களால் பாரியளவில் சேதமடைந்துள்ள ஊவா, மத்திய, வடமேல் மாகாணங்களில் 147 பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்…

Read More

சர்வதேச மனிதாபிமான உதவிகளைக் கண்காணிக்க உயர்மட்ட தேசியக் குழு நியமனம்

நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை…

Read More

இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பங்களாதேஷ் தனது விமானப்படை மூலம் C-130J விமானத்தில் பெருந்தொகையான நிவாரண பொருட்களையும் , மீட்ப்புப்பணிக்கு தேவையான சில பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தவிமானமானது நேற்று (03) இலங்கைக்கு வந்தடைந்தது.

Read More

இலங்கைக்கு நிவாரண பொருட்களை கையளித்த பாக்கிஸ்தான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காலத்தில் மீட்ப்புப்பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது. இலங்கை மக்களுக்கு தேவையான ஒரு தொகை அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களோடு பாக்கிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கையை நேற்று (3) வந்தடைந்தது.

Read More