தடைப்பட்ட தொலைபேசி, இணையத் தொடர்பு இன்று முழுமையாக மீட்கப்படும் – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

அனர்த்தம் காரணமாக தடைப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள்  வியாழக்கிழமை (04) முழுமையாக மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன தெரிவித்துள்ளார். சேவைகளை மீட்டெடுக்க டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் அயராது உழைத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, மாகாண பைபர் இணைப்புகள் 11 இடங்களில்…

Read More

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் – செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டுகோள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவது தொடர்பாக இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். அனர்த்தம் காரணமாக இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே, பணத்தை ஒரு தடையாக கொள்ளாமல், இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க தேவையான தகவல்களை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியதுடன், துல்லியமான தரவுகளை விரைவாகப் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்….

Read More

அனர்த்தத்திற்கு பின்னான மீட்டெடுக்கும் திட்டம் – அனைத்து கட்சி தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் இருந்து, நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீள இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேளைத்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (3) கலந்துரையாடவுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நடவடிக்கை காரியாலயத்தில் இன்று (3) மாலை 4.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகையில், நாட்டில் கடந்த காலங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக விஜயம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கம்பளை கணபதி தோட்ட மக்களை நேற்று நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன் இராசமாணிக்கம், திலித் ஜயவீர மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அதேபோன்று கண்டி மாவட்டத்துக்கும் சென்றுள்ளனர்.கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவும் இதன்போது கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை…

Read More

இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, சர்வதேச மனிதாபிமான நட்பின் ஊடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்தை ஆதரித்து, ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு…

Read More

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர். தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில்…

Read More