கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.