கோடிகளில் ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில்,…

Read More

48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம்.. கப்பலில் காத்திருந்த அதிர்ச்சி

அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர். அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும். இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, ​​மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் எடுத்த காணொளியில், கப்பலின் பிரமாண்டமான…

Read More

நவீன போர்க்கப்பலை உருவாக்கிய வடகொரியா

வடகொரியா உருவாக்கி உள்ள புதிய போர்க்கப்பல் ஏராளமான ஏவுகணைகளை தாங்கி செல்லும் வல்லமை கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சோங்ஜின் மற்றும் நம்போ கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட 4000 டன் எடை கொண்ட பெயரிடப்படாத கப்பலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வடகொரியா கடற்பயணத்தில் ஈடுபடுத்தியது. அமெரிக்காவின் ஆர்லீ பர்க் நாசகாரி கப்பலின் அளவில் பாதியை கொண்டுள்ள வடகொரிய கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More

ராமேஸ்வரம் தலைமன்னார் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து…

Read More

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்.

இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “maanya mooya” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கான அதற்கான முன்னோட்ட பயணம் இடம்பெற்று , சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார். இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்…!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது. செவ்வாய்க்கிழமையை தவிர ஏனைய 6 நாட்களும் கப்பல் பயணப்படும். குறித்த இணையத்தினூடாக பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Read More