புத்தளம் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் நகர் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கும், தெரிந்தவர்கள் இல்லத்துக்குமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளார்கள். அவசர கால நிலைத்தொடர்பில் உதவிகளை பெற்றுக்கொள்ள 117 என்கின்ற எண்ணுக்கு அழைப்பை மேற்க்கொள்ளுங்கள். காணொளி பதிவு – கிருஷான் யோகராசா

Read More

இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையில் 27.11.2025 காலை 8.30மணியில் இருந்து 28.11.2025 காலை 8.30மணிவரைக்குமான காலப்பகுதியில் இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தத.

நேற்றிரவு பெய்த கடுமையான மழைக்காரணமாக ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அனைவரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணி இடம்பெற்று வரும் நிலையில் தற்போது ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புகைப்படம் – Ganeshan Mahadevan

Read More

நிவாரணங்களை வழங்குவதற்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக நிதி தேவைப்பட்டால் அறிவிக்குமாறு ஜனாதிபதி அநுர அறிவித்துள்ளார்.  அரச நிர்வாக மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரின் செயலாளர் ஊடாக இந்த தகவலை ஜனாதிபதி, சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி இன்றைய தினம் காலை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்…

Read More