செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

Read More