மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

133 தேர்தல் முறைப்பாடுகளுக்கு தீர்வு
இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 179 முறைப்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் இதுவரை 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 47 முறைப்பாடுகளை…