போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை GovPay ஊடாக செலுத்தும் திட்டம் அறிமுகம்

CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு வேலைத்திட்டமாக, GovPay நிகழ்நிலை (Online) வசதி ஊடாக போக்குவரத்து விதிகளை மீறலுக்கான அபராத பணத்தைச் செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையிலிருந்த திட்டத்தின் படி, ஒரு சாரதி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறினால், பொலிசாரால் வழங்கப்படும் தண்டனைச் சீட்டை தபால் நிலையத்தில் காண்பித்து அதில் குறிப்பிட்டுள்ள அபராத பணம் செலுத்தி அதன் ரசீதை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் மட்டுமே சாரதி…

Read More

சஜித்தை டெல்லிக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள்…

Read More

விசுவாவசு புத்தாண்டு பிறக்கும் நேரம்!

விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை மலரவுள்ளது.  சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 2 மணி 29 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 3 மணி 21 நிமிடத்துக்கும் விசுவாவசு வருடம் பிறக்கிறது.  மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் இன்று இரவு 11. 21 முதல் நாளை காலை 7.21 வரை உள்ளது.  புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது…

Read More

பொலிஸ் நிலையங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

பொலிஸ் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக்…

Read More

New Year with New Hopes SLT-MOBITEL Powers Rathabalagama School with Digital Access

SLT-MOBITEL hosted a meaningful Sinhala and Tamil New Year celebration at Rathabalagama Kanishta Vidyalaya in Hambegamuwa, Thanamalwila, combining cultural festivities with effective digital empowerment for the rural school community. The initiative, part of SLT-MOBITEL’s ongoing commitment to Environmental, Social, and Governance (ESG) principles, delivered critical digital infrastructure and educational resources to the school, which serves…

Read More

Hayleys Solar Introduces Exclusive Interest-Free Installment Plans for HNB Cardholders

Hayleys Solar, the renewable energy arm of Hayleys Fentons Limited, is offering exclusive interest-free installment plans for Hatton National Bank (HNB) credit cardholders, making solar energy more accessible and affordable. Under this limited-time offer, HNB credit cardholders can convert their solar purchases into interest-free installments of up to 60 months, providing a cost-effective path to…

Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.

Read More

பண்டிகை காலத்திற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 40 தொடருந்து சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட தொடருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Read More

ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் (103984), பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்தை பெண்ணை காப்பாற்றியுள்ளார். இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறித்த அதிகாரிக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிர் பிழைத்த இளம் பெண் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர் என தெரியவந்துள்ளது. அந்த இளம் பெண்…

Read More