அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

தொடரை கைப்பற்றிய இலங்கை.
ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (வெப்ரவரி 14) நடைபெற்ற அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அபாரமாக விளையாடி இலங்கை 174 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் இலங்கை கைப்பற்றிக்கொண்டது. 2016 ஆண்டில் 82 ஓட்டங்களால் அவுஸ்ரேலியவை வெற்றிகொண்ட இலங்கை 8வருடங்களுக்கு பின் மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் மா பெரும் வெற்றியை ஒருநாள் போட்டிகளில் பெற்றுள்ளது. அதேநேரம் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியனாக பங்குபெற்றவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு…