நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலுவான ஆதரவு மூலம் இலங்கையில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் கேம்பிரிட்ஜ்
“எதிர்காலத்தை வழிநடத்தல்: மாறும் உலகில் மாணவர்கள் வெற்றியடையத் தயாராக்குதல்’ எனும் ‘எதிர்காலத்திற்கான கற்றல் அறிக்கையை வெளியிடுகிறது” வலுப்படுத்தப்பட்ட பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் புதுப்பிக்கப்பட்ட மூலோபாய நோக்கத்தையும் உள்ளடக்கியவாறு, நாட்டின் கல்வித் துறையின் எதிர்கால தூரநோக்கை மேம்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள கற்போர் மற்றும் கற்பிப்போருக்கான தனது அர்ப்பணிப்பை Cambridge University Press & Assessment மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் ஒரு சட்டபூர்வ நிறுவனத்தை நிறுவுவதன் மூலம், தனது நீண்டகால முதலீட்டை வெளிப்படுத்துவதோடு, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடசாலைகளுடனும்…

