கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சன்ஸைன் ஹோல்டிங்ஸ்
பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட தலைமைத்துவ குழுக்கள், திட்டத்திற்கு பொறுப்பான குழுக்கள், சன்ஷைன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் /…