நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இல்பெரும் வெற்றியீட்டிய Sunshine Holdings
SLIM தேசிய விற்பனை விருது 2025 நிகழ்வில், பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமமான Sunshine Holdings PLC நிறுவனமானது, தமது விற்பனைக் குழுக்களின் 21 உறுப்பினர்கள் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டதுடன், அவர்கள் 7 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் மற்றும் 2 சிறப்புத் தகுதிகள் உள்ளிட்ட விருதுகளை வென்றனர். போட்டி நிறைந்த வணிகச் சூழலில் விற்பனைக் குழுக்கள் மிகவும் விலைமதிப்பற்றவையாக மாறியுள்ளன. அவை தயாரிப்புகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன. அத்துடன், வர்த்தக நாமங்களின் தூதுவர்களாகவும், வாடிக்கையாளர்…

