நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
SVAT க்குப் பிந்தைய ஏற்றுமதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு VAT பணத்தைத் திரும்பப்பெறும் அமைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என JAAF வலியுறுத்தல்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம், இந்த ஆண்டு அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) முறையை நீக்குவது குறித்த அரசின் முடிவை ஏற்பதாகத் தெரிவித்து, இந்த முடிவுக்கு ஏற்ப அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் மேலும் வலியுறுத்தியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், திருத்ததப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை நீக்குவது குறித்த முடிவை மாற்ற முடியாது என்பதால், இதன் விளைவாக ஆடை தொழிற்த் துறை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும்…

