நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெளியானது முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை – தங்காலை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தேசிய மக்கள் சக்தி 2260 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 1397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வஜன அதிகார கட்சி 177 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

