‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
24 மணி நேரமும் சேவையில் இருக்கும் அவசர தொலைபேசி இலக்கம்!
கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

