புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்ற சம்பவம் குறித்து மேலும் விசாரணை

இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை, நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், குறித்த சம்பவத்தில் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்புபட்டுள்ளார்களா? என்பதனை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுரைத்தது. முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த வழக்கை…

Read More

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Read More

புகையிரத சேவைகளில் தாமதம்

பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்பொல பகுதியில் தொடருந்து ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தே இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே போக்குவரத்து தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து…

Read More

ரயில் இயக்கப்படும் அட்டவணையில் திருத்தம்.

இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களின் தொடக்க நேரங்கள் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 7 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட்ட மீனகாயா எக்ஸ்பிரஸ் ரயில், மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் இரவு 11 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

ரயிலில் மோதுண்டு அனுராதபுர பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அனுராதபுர போலிஷ் பிரிவில் ஸ்ரவஸ்திபுர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது ஸ்ரவஸ்திபுர, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read More

புகையிரத விபத்தில் 5 யானைகள் பலி.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மீனகயா” புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 5 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் இரு யானைகள் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வெப்ரவரி 19) இரவு கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக அந்த பிரதேசத்தில் புகையிரத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் தம்புத்தேகம மற்றும் செனரத்க்காம ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(வெப்ரவரி 19) காலை இந்த இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்துள்ளனர். 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More