நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பதுளை ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கானசட்ட உதவி மற்றும் ஆலோசனை
நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் (JURE) கீழ், சட்ட விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் நீதி கிடைக்கும் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆரம்பம் 2025 ஓகஸ்ட் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பதுளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த இரண்டு நாட்களில், சட்டக்கல்வி மற்றும் அது தொடர்பான ஆதரவு மற்றும் வலுவூட்டல் நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் சமூகத்தினர்…

