நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முறையற்ற காணொளி பகிர்வால், பதவி இழந்த அமெரிக்க நகர முதல்வர்
அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகர முதல்வர், உள்ளூர் நகர பெண் சட்டத்தரணி ஒருவருக்கு முறையற்ற ரீதியில் வெளிப்படையான காணொளியை அனுப்பிய நிலையில், தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவின் மினோட்டின், பதவி விலகிய முன்னாள் முதல்வரான டேம் ரோஸ் என்பவர், தனது மதிய உணவு இடைவேளையின் போது முறையற்ற காணொளியை தனது நண்பி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக பெண் சட்டத்தரணி ஸ்டெபானி ஸ்டால்ஹெய்ம் என்பவருக்கு தவறுதலாக அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், குறித்த தவறினை சுத்தகரித்தபோதும்…

