நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு 09, வேலுவன கல்லூரியில் உலக சிறுவர் தினத்தை கொண்டாடிய டெல்மெஜ்.
டெல்மெஜ் குழுமம் (Delmege Group), கொழும்பு 09 இல் அமைந்துள்ள வேலுவன கல்லூரியில் 2025 உலக சிறுவர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது. இங்கு தரம் 01 முதல் 13 வரையான சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு Delmege குழுமத்தின் தாய் நிறுவனமான Vallibel One முகாமைத்துவப் பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன் தலைமையிலான, நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொண்ட டெல்மெஜ் பிரதிநிதிகள் குழுவினரை, கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் கெடட்…

