அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

19 சொகுசு ரக வாகனங்களை சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவு கட்டமைப்பிற்குப் போலி தகவல்களை வழங்கிப் பதிவைப் பெற்றதுடன் சுங்கத்திற்கு உரிய வரிப் பணத்தைச் செலுத்தாது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 19 சொகுசு ரக வாகனங்களை விசாரணைகளுக்காகச் சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.