நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
‘Weddings by Shangri-La: The Signature Edit’ திருமண கண்காட்சி செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது
திருமணங்களையும் தேனிலவுகளையும் கலைநயத்துடனும், பிரமாண்டத்துடனும், துல்லியமாகவும், வியக்கவைக்கும் வகையிலும் முன்னெடுக்க, ஷங்ரி-லா கொழும்பு ஹோட்டல், ‘Weddings by Shangri-La: The Signature Edit’ எனும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒருநாள் கண்காட்சியை பெருமையுடன் முன்னெடுக்கவுள்ளது. இந்நிகழ்வு 2025 செப்டெம்பர் 21ஆம் திகதி, பிரமாண்டமான ஷங்ரி-லா போல்ரூம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தங்களது சிறப்புமிக்க நாளைத் திட்டமிடவுள்ள திருமண தம்பதியனருக்காக, ஷங்ரி-லாவின் திருமண உலகை அறிமுகப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘தி சிக்னேச்சர் எடிட்’ நிகழ்வின் மையக்கருவாக, கொழும்பின் மிகப்பெரிய தூண்கள்…

