அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

மார்பில் குழந்தையோடு மிடுக்காக தொழில் புரியும் தாய்…
டெல்லி ரயில் நிலையத்தில் தனது குழந்தைக்கான அரவணைப்பை வழங்கியபடி நேர்த்தியாக தனதுதொழிலையும் செய்யும் பெண் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை(RPSF) காவலரது காணொளி சமூகவலைத்தளத்தில் பெரும் பெற்றுள்ளது. அவருடைய பெயர் ரீனா RPSF இன் அதிகாரப்பூர்வ X கணக்கிலேயே இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.பெண் காவலரான ரீனா ஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் கையில் தடியுடன் கடைமையாற்றும் போது அவரது ஒரு வயது நிரம்பிய குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி அமைந்த அந்தக்காணொளி தாயின் அன்பை மற்றுமோர் தளத்தில் அமரவைத்துள்ளது.