இலங்கை கடவுச்சீட்டின் மதிப்பு அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை கடவுச்சீட்டுக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு தற்போது தரவரிசையில் 43.5 மொத்த மதிப்பெண்களுடன் 168ஆவது இடத்தில் உள்ளது. குறித்த அமைப்பு 199 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை 171ஆவது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 168ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கடவுச்சீட்டுகளின் வலிமையை அறிவிக்க Nomad Capitalist 5…

Read More

2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே – விஜய் சூளுரை

‘மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி 2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.” என…

Read More

சஜித்தை டெல்லிக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள்…

Read More

சீனப் பொருட்களுக்கு 145% வரி – அமெரிக்கா விளக்கம்

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (9) விதித்த 125% வரி குறித்து ​​விசேட விளக்கத்தை அளிக்கும் போதே இந்த தகவல் வௌியிடப்பட்டுள்ளது. சீனப் பொருட்களுக்கு முன்னர் இருந்த 20% வரி விகிதம் உள்ளீர்க்கப்படாமலேயே வரி குறித்து நேற்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, சீனாப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விகிதம் 145%…

Read More

தனியார் ஹெலிகாப்டர் விபத்து.. 06 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற போது நியூயார்க் ஹட்சன் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது. லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

Read More

இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிரேஸ் டேவிட்சன் என்ற 36 வயதான பெண் பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார். கிரேஸ் 2023 ஆம் ஆண்டில் தனது சகோதரியான ஏமியின் அறுவை சிகிச்சை ஊடாக கருப்பையைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான…

Read More

உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 104% சுங்க வரியை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். டிரம்ப் நிர்வாகம், சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த “பரஸ்பர சுங்க வரி” கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா, அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி உயர்வுக்கு பதிலடியாக 34% கூடுதல் வரியை அமெரிக்க…

Read More

சீனப்பொருட்களுக்கு இன்று முதல் 104% வரி

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

Adani’s Colombo Terminal Commences Operations A Landmark Achievement in India–Sri Lanka Maritime Partnership

Ahmedabad & Colombo, 07 April 2025: Adani Ports and Special Economic Zone Ltd. (APSEZ), India’s largest integrated transport utility, has announced the commencement of operations at the Colombo West International Terminal (CWIT), located at the Port of Colombo. Developed under a landmark public–private partnership, CWIT is operated by a consortium comprising India’s largest port operator…

Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(ஏப்ரல் 07) இரவு வாயு…

Read More