அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை…

Read More

நவீன போர்க்கப்பலை உருவாக்கிய வடகொரியா

வடகொரியா உருவாக்கி உள்ள புதிய போர்க்கப்பல் ஏராளமான ஏவுகணைகளை தாங்கி செல்லும் வல்லமை கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சோங்ஜின் மற்றும் நம்போ கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட 4000 டன் எடை கொண்ட பெயரிடப்படாத கப்பலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வடகொரியா கடற்பயணத்தில் ஈடுபடுத்தியது. அமெரிக்காவின் ஆர்லீ பர்க் நாசகாரி கப்பலின் அளவில் பாதியை கொண்டுள்ள வடகொரிய கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக…

Read More

அமெரிக்காவின் நடத்தை ஈரானை தூண்டும்விதமாக உள்ளது. எச்சரிக்கின்றார் ஈரானின் ஆன்மீக தலைவர்

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் என ஈரானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆயத்தொல்லா அலி கமேனியின் ஆலோசகருமான அலி லரிஜானி இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது நடத்தையை மாற்றவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். சாகோஸ் தீவின் டியாகோகார்சியா தளத்தில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது குண்டுவீசினால் அல்லது இஸ்ரேலை குண்டுவீச தூண்டினால் அவை ஈரான் வேறு விதமான முடிவை எடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என அலி…

Read More

மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் மக்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து…

Read More

இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, மியான்மாரில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Read More

இரவுநேர நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியிலுள்ள வீட்டில் நேற்று, இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி, இரவு 12 மணியளவில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read More

மியன்மார் நிலநடுக்கதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு…

Read More

X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். 2022 ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். எலான் மஸ்க்தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எக்ஸ் ஏ.ஐ நிறுவனமும் எலான் மஸ்க்குக்கு சொந்தமான நிறுவனமாகும். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன….

Read More

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More