பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்.

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நேற்று(ஏப்ரல் 04) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்து உலகலவியரீதியில் பல இடங்களில் 7 ரிக்டருக்கும் அதிகளவான நிலநடுக்கம் பதிவாவதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. பின் அவை தளர்த்தப்படுகின்றன.

Read More

இந்திய பிரதமருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு.

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் உத்தியோக பூர்வ இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் காணொளியொன்றை பதிவிட்டு “அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” எனவும் கூறியுள்ளார். அதேநேரம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று (ஏப்ரல்…

Read More

இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

Read More

48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம்.. கப்பலில் காத்திருந்த அதிர்ச்சி

அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர். அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும். இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, ​​மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் எடுத்த காணொளியில், கப்பலின் பிரமாண்டமான…

Read More

சமூக ஊடகங்களை ஆளும் “ஜிப்லி”

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனா். பலரது சுயவிவரப் படங்களிலும் இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்கள் அலங்கரிக்கின்றன. ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான ‘சாட்ஜிபிடி’ உள்ளிட்ட சில தகவல் உதவி செயலிகள்தான் மக்களுக்கு இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்களை இலவசமாக உருவாக்கித் தருகின்றன. சமூக…

Read More

முறையற்ற காணொளி பகிர்வால், பதவி இழந்த அமெரிக்க நகர முதல்வர்

அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகர முதல்வர், உள்ளூர் நகர பெண் சட்டத்தரணி ஒருவருக்கு முறையற்ற ரீதியில் வெளிப்படையான காணொளியை அனுப்பிய நிலையில், தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவின் மினோட்டின், பதவி விலகிய முன்னாள் முதல்வரான டேம் ரோஸ் என்பவர், தனது மதிய உணவு இடைவேளையின் போது முறையற்ற காணொளியை தனது நண்பி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக பெண் சட்டத்தரணி ஸ்டெபானி ஸ்டால்ஹெய்ம் என்பவருக்கு தவறுதலாக அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், குறித்த தவறினை சுத்தகரித்தபோதும்…

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த மேலும் தெரிவிக்கையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12:00 வரை இணையவழி (online) ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எக்காரணம்…

Read More

ரஷ்யாவில் புதிய வைரஸ்!

ரஷ்யாவில் பரவி வரும் மர்மமான வைரஸ் காரணமாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவிட் தொற்றுக்கு பிறகு மக்களிடையே பல புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ரஷ்ய மக்களை இனம்கண்டுகொள்ளாத குறித்த வைரஸ் தாக்கி வருகிறது. இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் இரத்தம் கலந்த இருமல் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் அதிக…

Read More

நவீன போர்க்கப்பலை உருவாக்கிய வடகொரியா

வடகொரியா உருவாக்கி உள்ள புதிய போர்க்கப்பல் ஏராளமான ஏவுகணைகளை தாங்கி செல்லும் வல்லமை கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சோங்ஜின் மற்றும் நம்போ கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட 4000 டன் எடை கொண்ட பெயரிடப்படாத கப்பலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வடகொரியா கடற்பயணத்தில் ஈடுபடுத்தியது. அமெரிக்காவின் ஆர்லீ பர்க் நாசகாரி கப்பலின் அளவில் பாதியை கொண்டுள்ள வடகொரிய கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக…

Read More