65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
YKK மற்றும் ரியல் மெட்ரிட் அமைப்பு இலங்கையில் குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்துநூற்றுக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்தது
கொழும்பு, இலங்கை – 29 ஒகஸ்ட் 2025 – YKK HOLDING ASIA PTE. LTD. (YHA) ஆனது YKK Lanka (Pvt) Ltd உடன் இணைந்து, ரியல் மெட்ரிட் அமைப்புடன் (RMF) கூட்டாண்மையில், YKK ASAO குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமின் (YKK AKFC) 29ஆவது பதிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இவ்வாறு இந்நிகழ்வு மூன்றாவது முறையாக இலங்கையில் நடைபெற்றது. இவ்வாண்டின் நிகழ்வானது கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒகஸ்ட் மாதம் 27 முதல் 29ஆம் திகதி…

