For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது, இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 73.4 சதவீத மக்களுக்கும் , அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட70.05 சதவீத மக்களுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 68.39% சதவீத மக்களுக்கும், மாத்தளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 65.28 சதவீத மக்களுக்கும் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 61.42 சதவீத மக்களுக்கும் இதுவரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் இந்த உதவித்தொகை வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. இதனை துரிதப்படுத்த அதிகாரிகள் தற்போது தலையிட்டு வருகின்றனர்.
Downloaded the phwin88app, pretty smooth on my phone. Easy to use, games seem alright. Good for a quick game on the go. Get the app here: phwin88app